Saturday 8 September 2012

80+ வயதிலும் ஒரு அழகு

சமர்ப்பணம் :





' கிளாசிற்கு போய்  15 நாள் ஆகிறது , என்னவெல்லாம் மிஸ் பண்ணேனோ தெரியலையே ,

'பரவாயில்லை , உடம்பு  சரியில்லாததனாலே தானே லீவ் எடுத்தது, ஈஸியா பிக்  அப் செய்துக்கலாம்,'

'ரொம்ப பயமா இருக்கு , டீச்சர் என்ன சொல்லுவாளோ  தெரியலையே '

'கவலைபடவேண்டாம் நான் வந்து சொல்லறேன் '.

இ தில் கிளாசிற்கு போகாமல் பயந்தது என் அன்பிற்குரிய அம்மா , 80+

பதில் சொன்னது நான் .

ஆச்சர்யமாக இருக்கிறது தானே!

ஆனால் இது உண்மைதான் .

என் அம்மா மிகவும் சுறுசுறுப்பான பேர்வழி . காலையில் இன்றும் 5.30 மணிக்கு எழுந்து குளித்து பூஜை மற்றும் சிறு சிறு தன்னால் முடிந்த வேலைகளை செய்து துவிட்டு பின் பக்கத்துக்கு ரோடில் இருக்கும் பாகவத  கிளாஸ் மதியம் 1.30 மணிநேரம் சென்றுவிட்டு , வீட்டிக்கு வந்து சிறிது ரெஸ்ட் எடுத்ததுகொண்டு பின் மீண்டும் மிக  அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விஷ்ணு சஹாஸ்ரநாமம் சொல்லிவிட்டு பின் சில தமிழ் சீரியல் தொலைக்கட்சியில் பார்த்துவிட்டு பின் ரெஸ்ட் .

இப்படி  தனக்குத்தானே ஒரு routine  வைத்துக்கொண்டு  எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் என் அன்னை ஒரு அதிசயபிறவிதான் . எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் வீட்டு  வேலைகள் செய்துகொண்டு  குடும்பம் , வீடு என்று இருந்தவர், என் தந்தையின் மறைவிற்கு பின் , கடமைகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் , தனக்கு பிடித்தமான ஸ்லோக கிளாஸ் செல்லும் வழியில் 80 வயதிற்கு மேல் ஆரம்பித்து இன்று மிகவும் அனைவருக்கும் பிடித்தமான செல்ல student  ஆக என் அன்னை விளங்குகிறார் .

இந்த அழகான வாழ்க்கைக்கு தேவையான உள்ளதையும் , ஆரோக்யத்தையும் கொடுத்த அந்த இறைவனுக்கு என் உள்ளார்ந்த  , நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு , சுறுசுறுப்பிற்கும் , சிரித்த முகத்திற்கும் உதாரணமாக விளங்கும என் அன்னையே உங்களுக்கு என் salute.

15 நாட்கள் உடம்பு சுகமில்லாமலிரிந்து இன்று மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் நாராயணீயம் மற்றும் விஷ்ணுசஹரநாமம்  வகுப்பிற்கு  5 வயது பிள்ளையின்  உற்சாகத்துடன் செல்ல அரம்பித்திற்கும்  என் அன்னை  ஒரு அபூர்வபிறவிதான் . அதனால் தானோ என்னவோ என்றும் இளமையுடன், தினம் தினம் முக அழகு ஜொலிப்பது போல் இருக்கிறது என் அன்னைக்கு.






Thursday 2 August 2012

கோவை ,சிறுவாணி தண்ணீர் , கூந்தல் அழகு





கூந்தலும் தண்ணீரும் என்றவுடன் என் நினைவிற்கு வருவது என் இனிய கோவையே .

கோவையில் சிறுவாணி தண்ணீர் . ஆஹா ! என்ன அருமை என்ன அருமை . ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வரும் .( நான் சொல்லுவது 1980 வரை இப்பொழுது எப்படியென்று தெரியாது), அதுவும் hand pump . அடித்து அடித்துதான் தண்ணீர் நிறைக்க வேண்டும். அடுத்த நாள் வெள்ளி கிழமை என்றால் தலைக்கு குளிப்பவர்கள் ஒரு பக்கெட் கூட நிரப்பிக்கொள்ளவேண்டும் காலேஜிலிருந்து வந்தவுடன் டீ குடித்துவிட்டு என் turn எடுத்து அடிக்கும் அவசரம் இனிமையான நினைவு. அப்பொழுது பக்கத்துவீட்டிற்கு மதில் சுவர் குட்டையாக இருக்கும் . ஒரு நாலு வீட்டில் தண்ணி அடிப்பது தெரியும் . அதனால் பேசிகொண்டே கடகடவென்று தொட்டியில் நீர் நிரப்பி அடுத்த ஆள் கை மாற்று கொடுக்கும் அவசரம் , நிம்மதி......... சொல்லி முடியாது.
மேலும் வெள்ளி கிழமை தலைக்கு குளித்து நல்ல ஆடை அணிந்து ஏற்பாடாக பூ வங்கி வைத்து , சூடி............

பூ என்றவுடன் நினைவில் வருவது.......... கோவையில் ஒருவிதமாக நெருக்கமாக ஜாதிப்பூ தொடுப்பார்கள் . மிக அழகாக இருக்கும் .அதை கொஞ்சமாகத்தான்  சூடும் வழக்கம் உண்டு .வெள்ளி  அன்று காலேஜ் முழுக்க மிக அழகான காட்சியாக இருக்கும் .சிறுவாணிதண்ணீ ருக்கு  தலைமுடி நன்கு வளரும் . அங்கு பச்சை அரப்பு என்று ஒரு தலைக்கு தேய்க்கும் போடி
 ஒன்று கிடைக்கும் . நாங்கள் அனைவரும் அந்த பொடிதான் உபயோகிப்பபோம் . முடி நன்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கோவை என்றவுடன் இனிமையான தென்றல் காற்று வீசுவதைப்போல , கண்ணை மூடி ரசிக்கும் melody பாடல்களைப்போல ( என் இனிய பொன் நிலாவே .................) close to my heart.

Saturday 7 July 2012

தண்ணீரும் கூந்தலும்


 கூந்தல் பராமரிப்பு என்றவுடன் எனக்கு முதலில் நினைவில் வருவது 'தண்ணீர்''
இப்பொழுது வெவ்வவேறு தண்ணீர் நாம் தினப்போழுதில் உபயோகிக்கின்றோம்  . போர் தண்ணீர், கிணற்று தண்ணீர் , corporation water மற்றும் பல . ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடையது. நீரில் உப்பு இருந்தால் முடி கொட்டும்.. chemical கலந்திருந்ததால்   பளபளப்புதன்மை குறையும். தண்ணீர் கிடைக்காத இந்த காலத்தில் இருக்கும் நீரை உபயோகப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம் . இந்த நிலையில் நாம் நம் முடி பராமரிக்கும் முறையில் கடைபிடிக்கவேண்டிய நியதிகளைபார்ப்போம்  .

1. போர் தண்ணீரில் கடினத்தன்மை இருக்கும் , அதனால் இங்கு வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்தவேண்டும்  .
2.போர் thanneeraha இருந்ததால் முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவி பின் சீயக்காய் அல்லது மென்மையான (without much lather ) இல்லாத ஷாம்பூ உபயோகிக்கவும் .
3.கடைசி mug மினரல் தண்ணீர் விட்டுகுளிப்பது .நலம்
4.2 துளி எலுமிச்சை சாறு அல்லது இருமுறை கொதித்து ஆறிய டீ தண்ணீரை ஒரு mug மினரல் தண்ணீரில் கலந்து அதை கடைசியாக  விட்டுக்கொள்ளவும் .

கிணற்று தண்ணீர் என்றால்
1. இதில்  உப்பு அதிகம் . முடி நிறையவே கொட்டும், அதனால் நல்ல தரமான வீட்டில் தயாரித்த herbal oil நிறைய தலையில் தடவி நன்கு ஊறியபின் நல்ல சீயக்காய் கொண்டு முடி அலசவேண்டும் .
2. சீயக்காயிற்கு இந்த கிணற்று நீரில் எண்ணெய் போகாது அதனால் ஒருமுறை நன்கு தேய்த்து அலசியபின் மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும்..இல்லையென்றால் சிறிது தரமான ஹெர்பல் ஷாம்பூ உபயோகிக்கலாம்  .எண்ணெய் நிறைய தடவவேண்டியது அவசியம்..
3.குளித்தவுடன் தண்ணீர் போக  தவுட்டிவிடவேண்டும்..
4. இங்கும் கடைசி mug எலுமிச்சை சாரு அல்லது டீ தண்ணீர் விட்டு அலசலாம் .

corporation water:
இதில் க்ளோரின் கலந்திருப்பதால் முடி dry ஆகும். இங்கும்  நாம் எண்ணெய் அதிகம் தடவி ஊறி குளித்தல் நலம்.. வாரம் 3 முறை தலை அலசலாம் .இங்கு முடி பிரவுன் நிறத்திற்கு விரைவில் மாறி பின் விரைவில் நரைத்துவிடும்..
நல்ல தரமான எண்ணெய் மிக மிக அவசியம்..

leave on chemical conditionr தவிர்ப்பது நலம் ஏனென்றால் இதில் ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் முடி மெல்லியதாக ஆகிவிடும்  விரைவில் ..எப்பொழுதும் எலுமிச்சை சாறு அல்லது டீ  தண்ணீர் conditioner உபயோஹிப்பது நலம்..

தரமான எண்ணெய் தயாரிக்கும் முறை அடுத்த பதிவில்..

குறிப்பு : டீ தண்ணீர் எப்பொழுதும் உபயோகப்படுத்திய டீ தண்ணீரை மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டி பின் ஆறவைத்து உபயோகிகவும்..(boil used tea water  for the second time)


Thursday 21 June 2012

கூந்தல் பராமரிப்பு




 கூந்தல் பராமரிப்பு :

  அழகு என்பது இறைவன் கொடுத்த வரம்தான் அதில் சந்தேகமில்லை அனால் அதை பேணுவது நிச்சயம் நம் கையில்தான் இருக்கிறது என்பது என் கருத்து இதை நீங்களும் ஒத்துகொள்வீரகள் என்று நம்புகிறேன் .

இந்த ப்ளாக் எழுதுவதற்கு எனக்கு சிறிது தகுதி இருபதாக எண்ணுகிறேன் ஏனென்றல் நான் ஹெர்பல் காஸ்மெடிக் பிரிவில் கடந்த 20 வருடங்களாக product செய்து வருவதனாலும் மேலும் ஹெர்பல் மூலிகை ஆராச்சி செய்வதனாலும் ஓரளவு authentic -காக பஹிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் .

முதலாக அழகிய பளபளப்பான ஜெட் ப்ளாக் கூந்தலை பெற என்ன வழி :


6 முதல் 60 இல்லை இல்லை 80 வயது வரை ஆண் பெண்ண அனைவரும் விரும்புவது அழகிய கூந்தல் .நீண்ட கூந்தல்  பரம்பரை விஷயம் என்றாலும்
இருக்கும் கூ ந்தலை நன்றாஹ  பேணுவது நம் கையில்தான் இருக்கிறது .

1. முதலில் முடியை நல்ல சீப்பு கொண்டு 2 வேளை யும் நன்கு வா ரிவிட வேண்டும் . avoid plastic comb . நல்ல தரமான wooden comb பயன்படுத்தவும் . விலை சற்று கூட இருந்தாலும் இதுதான் basic step .
2.வாரம் 2 முறை minium headbath எடுக்கவும் .எப்படி தலைக்கு குளிக்கவேண்டும் என்பதை நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன் .
3. முடியை இயற்கையாஹ உலரவிடவும். அதாவது துண்டால் மெ து வாஹ தவுட்டவும். a BIG NO to hair dryer
4நமது தலைமுடி மிஹவும் மென்மையானது மேலும் மாதம் 1/2 இன்ச் தான் வளரும் அதுவும் பரம்பரையை பொருத்தது ஆதனால் மிஹ      மிஹ மேன்மயாஹ கையாளவேண்டும் .
5. மாதம் ஒருமுறை சிறிது நுனி வெட்டிவிடவேண்டும் .
6.வீட்டில் தயாரித்த சீயக்காய் பொடி அல்லது நல்ல தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவேண்டும் .(சீயக்காய் தயாரிக்கும் முறை நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
7.மிஹ முக்கியமானது என்னவென்றல் ஷாம்பூ போடும்முன் கட்டாயம் முடிக்கு எண்ணெய் application செய்யவேண்டும் . இல்லையென்றல் முடி கொட்டும்.(எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
8.தலைமுடி எப்பொழுதும் dry யாக இருக்ககூடது.
9. aircondition அறையில் வெஹு நேரம் இருந்தாலும் முடி கொட்டும்.
10. Direct வெயிலிலும் முடியை expose செய்யகூடாது.

இவையெல்லாம் basic முடி பராமரிப்பு. இனி ஜெட் ப்ளாக் ,பளபளப்பான முடி எப்படி பெறுவதென்பதை அடுத்த பதிவில் காண்போம்.

மேலும்  ஒவ்வொரு type  முடி பற்றியும் அதை பாதுகாக்கும் முறை பற்றியும் வரும் பதிவுகளில் பார்ப்போம் .

நான் recommend செய்யும் comb 'ROOTS ' wooden comb . முடி இழுப்பதில்லை .நல்ல soft ,மேலும் round edges .